×

தஞ்சாவூரில் மழை ஓய்வெடுத்து வெயில் தலைகாட்டியது அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 365 மனுக்கள் குவிந்தன

 

தஞ்சாவூர், நவ.21: தஞ்சாவூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 365 மனுக்கள் பெறப்பட்டன. தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா.

முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 365 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர்.
இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்

The post தஞ்சாவூரில் மழை ஓய்வெடுத்து வெயில் தலைகாட்டியது அகல்விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 365 மனுக்கள் குவிந்தன appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,People's Grievance Day ,Thanjavur.… ,People's Grievance Camp ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மருத்துவமனை வளாகத்தில்...